இவ்வருடம் இதுவரை 250 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்!

Tuesday, March 22nd, 2022

இந்த வருடத்தில் இதுவரை 250, ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் சுமார் 108, ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், மின்வெட்டு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுற்றுலாத்துறையில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: