இழப்பீடு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்!

Saturday, May 19th, 2018

உலக வங்கியின் உதவியுடன் கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறைக்கான தார்க்கலவைசாலை அமைப்பதற்கு காணிகளை வழங்கிய பொதுமக்களுக்கான இழப்பீடு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.

உலக வங்கியின் நிதிப் பங்களிப்புடன் கொடிகாமத்திலிருந்து தென்மராட்சி பிரதேசத்திற்குட்பட்ட முள்ளி வரையான பகுதிகளில் தார்க்கலவைச்சாலை அமைப்பது தொடர்பாக கடந்த வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பிரகாரம் காணிகளுக்கான பெறுமதி விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தினால்  மதிப்பீடு செய்யப்பட்டு வழங்கப்பட்ட காணிகளுக்கான பெறுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக அலுவலர்கள் முன்னிலையில் காணி உரிமையாளர்கள் தனித்தனியாக அழைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related posts:


கடுமையான சகாதார கட்டுப்பாடுகளுடன் 10 முதல் 13 வரையான தரங்களின் கற்றல் செயற்பாடுகள் இன்றுமுதல் மீள ஆர...
நாட்டில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப்போவதில்லை - நிதி அமைச்சர் பசில் உறுதிபடத் ...
வார இறுதியின் பின்னர் எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!