ட்ரம்ப் அழுத்தம் கொடுக்க வேண்டும்!
Thursday, June 8th, 2017தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என ட்ரம்பிற்கான தமிழர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திடம் பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கும் டொனால்ட் ட்ரம்ப் குறித்த விடயம் தொடர்பில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
குடாநாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இன்றும் கடும் மழை பெய்யும்!
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் அடுத்த வாரம்!
வீதி விபத்துக்களில் 42 சதவீதமானவை உந்துருளியினால் ஏற்பட்டவை - அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப...
|
|