இயற்கை அனர்த்தம் தொடர்பில் நாடாளுமன்றில் அவசர கூட்டம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/05/download-2-21.jpg)
இயற்கை அனர்த்தப் பாதிப்புகள் குறித்து கலந்துரையாடும் வகையில் நாடாளுமன்றத்தின் அவசர கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் 14ம் விதியின் பிரகாரம் சபாநாயகர் கரு ஜயசூரிய இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளார்.நாளை பிற்பகல் ஒரு மணியளவில் கூடவுள்ள நாடாளுமன்றத்தின் அவசர கூட்டத்தின் போது வெள்ளப் பாதிப்புகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உரிய சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாவிடின் புத்தாண்டுக்குள் பாரிய நெருக்கடியை எதிரகொள்ள நேரிடும் –...
மில்கோ நிறுவனத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம் - பாலை 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் திட்டம் நா...
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை - ஐ.நா. பிரதிநிதிக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம்!
|
|