விடுதலை வித்துக்கள் தினம் இன்று – மரணித்த தோழர்களை அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நினைவு கூர்ந்து அஞ்சலித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!

Wednesday, June 5th, 2024

விடுதலை வித்துக்கள் தினம் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜநயானகக் கட்சியால் நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்பட்டது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் வித்தாகிப் போன தோழர்கள் உட்பட ஈழப் போராட்ட வரலாற்றில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்து மரணித்த அனைத்து இயக்கங்களின் போராளிகளுக்கும் பொது மக்களுக்கும் விடுதலை வித்துக்கள் தினமான இன்றைய நாளில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நினைவு கூரப்பட்டு அஞ்சலி  செலுத்தப்பட்டது

குறிப்பாக  பொன் சிவகுமாரனது நினைவு நாளான இன்றைய நாளில் ஒவ்வொரு வருடமும் குறித்த விடுதலை வித்துக்கள் தினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது

ஈழப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த முதலாவது போராளியான தியாகி பொன். சிவகுமாரின் 50 ஆவது நினைவுதினம் இன்று அனுஸ்டிக்கப்பட்ட நிலையில், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வை எதிர்வரும் ஆண்டுகளில் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டங்களில் உயிர்த்தியாகம் செய்த தோழர்கள் நினைவுரப்படுவர் என கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் – தோழர் கீ.பி. தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

எமது கடல் வளங்களை எவரும் சட்டவிரோதமான முறையில் சுரண்டுவதற்கு அனுமதிக்க முடியாது – நாடாளுமன்றில் அமைச...
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான துறைசார் தரப்பினருடன்...
FAO சர்வதேச அமைப்பின் உதவிப் பணிப்பாளர் நாயகம் மனுவேல் பராங்கே - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு...

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் முன்னிலையில் கட்சியின் சார்பில் தெரிவான உள்ளூராட்சி  மன்ற உறுப...
தேசிய நல்லிணக்கத்தை இரு கைகளாலும் பற்றிப் பிடித்து முன்னேற வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. த...
நீதிக்கு தலை வணங்குவேன் : அநீதிக்கு அடிபணியேன் - கடற்றொழிலாளர்க்கு தீங்கிழைக்கவும் மாட்டேன் - அமைச்ச...