முழங்காவில் படித்த வாலிபர் திட்டக் காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண டக்ளஸ் தேவானந்தா முயற்சி!

Thursday, June 30th, 2016

முழங்காவில் படித்த வாலிபர் திட்ட காணியை பங்கீடு செய்வதில் உள்ள  பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் தேவனந்தா விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

முழங்காவில் பகுதிக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா அம்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

1978 ஆம் ஆண்டு முழங்காவில் பகுதியிலுள்ள குறித்த காணிகள் படித்தவாலிபர் திட்டத்திற்காக பங்கீடு செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு பங்கீடு செய்யப்பட்ட குறித்த காணிகளின் உரிமையாளர்கள் நாட்டின் யுத்த சூழல் காரணமாக தமது காணிகளை விட்டு வேறிடங்களில் குடியிருந்த நிலையில் தற்போது இயல்பு நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில் தமது காணிகளுக்கு மீளவும் திரும்பிவருகின்றனர்.

இதனிடையே காணி உரிமையாளர்கள் இல்லாதிருந்த நிலையில் அக்காணிகளில் தற்காலிகமாக வசித்துவந்த மக்கள் குறித்த காணிகளில் தமக்கும் பங்கீடு செய்து தரப்படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் துறைசார்ந்த அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடி அதற்கான தீர்வுகளை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

2

3

5

Related posts:

கொலைகள் தொடர்பான விசாரணைக் கோரிக்கையைக் கண்டு  சுரேஸ்பிரேமச்சந்திரன் ஏன் அஞ்சுகின்றார்- டக்ளஸ் தேவா...
எமது மாணவர்கள் தாய்மொழியுடன் இதர மொழிகளிலும் தேர்ச்சியுற்றவர்களாக உருவாக வேண்டும் - டக்ளஸ் எம்.பி தெ...
கொழும்பு விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலய சிறப்பு நிகழ்வின் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவான...