சுழியோடிகளின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதாக – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாக்குறுதி!

Friday, February 7th, 2020

அகில இலங்கை சுழியோடிகள் சங்க உறுப்பினர்களுக்கும் கடற்றொழில் நீரியல் வள மூல அமைச்சர் டக்ளஸ் தேவானத்தாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (2020.02.06) இடம்பெற்றது.

அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போது சுழியோடிகள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவூம் அதனால் தமது தொழிலை முன்னெடுத்துச் செல்வதில் ஏராளமான சாவல்களை எதிர்கொள்வதாகவூம் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.

சுமார் 200க்கு மேற்பட்ட சுழியோடிகள் கலந்துகொண்ட இச்சந்திப்பில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் காரணமாக தமது தொழிலை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவூம் அதனால் அவ் வர்த்தமானி அறிவித்தலில்; காணப்படும் சில விடையங்களை அகற்றுவதற்கு நடடிவக்கையெடுக்கு மாறும் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

சுழியோடிகளின் பிரச்சினைகளை ஆதூரத்தடன் செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇ சுழியோடிகள் நாட்டிற்கு மிகவூம் இன்றியமையாதவர்கள் எனவூம் அவர்களின் பிரச்சினைகளை தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடி  விரைவில் தீர்வினை பெற்றுக் கொடுப்பதாகவூம் உறுதியளித்தார்.

இவ் சந்திப்பில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கஇ கடற்றொழில் நீரியல் வள திணைக்களைத்தின் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன கினிகே ஆகியோர் கலந்து கொண்டிருந்தானர்.

Related posts:

மீள்குடியேற்ற இடங்களிலும் உப தபாலகங்கள் அமைக்கப்பட வேண்டும் - செயலாளர் நாயகம் வலியுறுத்து!
கிளிநொச்சி காணிகளை மக்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு - அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்குப் பலன்!
உருவாகியிருக்கும் அமைதியான சூழலை பாதுகாத்து வலுப்படுத்த முனைபவர்களின் கரங்களை மக்கள் வலுப்படுத்த வேண...

காக்கைதீவு மீன் சந்தை மற்றும் இறங்குதுறை சுகாதார முறைப்படி பராமரிக்கப்படுவதில்லை என அமைச்சர் டக்ளஸ் ...
வடக்கில் பாரிய கடல் பாசித் திட்டம் - தேவையறிந்து உதவும் இந்தியாவிற்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் - பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 3070 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்...