6 ஆம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!
Saturday, May 31st, 2025
2025 ஆம் ஆண்டு 6 ஆம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டு 6 ஆம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான முதல் சுற்று மேன்முறையீட்டு பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேன்முறையீடு மூலம் பாடசாலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை உள்வாங்குவது தொடர்பான விடயங்கள், சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபரால் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
000
Related posts:
ஜனநாயக விதிமுறைகளுக்கமைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் - பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை மேற்கொ...
அரச மற்றும் தனியார் நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவது குறித்து கவனம்!
எதிர்வரும் காலங்களில் முறையாக வாகன இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - நிதி இராஜாங்க அமைச்சர் ...
|
|
|


