10 ஆவது புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு – நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன அறிவிப்பு!
Saturday, November 16th, 2024
இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு எதிர்வரும் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக, நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.
இதன்போது, நாடாளுமன்ற முறை, பேரவையின் பணிகள், குழுக்களின் பணிகள் குறித்து விளக்கமளிக்கப்படும் என்றார்.
அதன்படி , 10 ஆவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எம்.பி.க்களின் பதிவு எதிர்வரும் 18, 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
அந்த நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் குழுக்கள் தயார்படுத்தப்படும் என்றும் குலரத்ன கூறினார். மேலும் இந்த நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க நாடாளுமன்ற ஊழியர்களின் விடுமுறை 18 முதல் 22 வரை இரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், கூறினார்
000
Related posts:
புகையிரத சேவைகளில் இராணுவம்?
உயர்தர பரிட்சை முடிவுகள்; முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் விபரம்..!
வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் வலுக்கட்டாயமாக ரூபாவாக மாற்றப்படுவதாக வெளியான தகவல் உண்மைக்குப...
|
|
|


