வலி கிழக்கில் ஈ.பி.டி.பியை கட்டமைப்பு ரீதியில் செழுமைப்படுத்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Sunday, January 26th, 2025


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர், மற்றும் முக்கியஸ்தர்கள், செயற்பாட்டாளர்களுடன் இன்று (26.01.2025) கலந்துரையாடலொன்றை செயலாளர் நாயகம் முன்னெடுத்திருந்தார்.

இதன்போது குறிப்பாக வலி கிழக்கு பிரதேசத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகளை செழுமைப்படுத்தும் வகையிலான பொறிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டதுடன்கட்டமைப்பு ரீதியான வலுப்படுத்தலும் இடம்பெற்றன. 

குறிப்பாக வலி கிழக்கில் கடந்த நாடளுமன்ற தேர்தலில் கட்சியின் அரசியல் செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டதுடன், தேர்தலின் பின்னடைவுகள் குறித்த அக, புற காரணிகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும் கட்சியின் செயற்பாடுகளை மேலும் செழுமைப்படுத்தி முன்னெடுத்துச் செல்லும் வகையில்
கட்சியின் தேசிய மாநாட்டை விரைவில் நடத்துவதற்கு தயாராகுமாறும் குறித்த பிரதேச கட்சியின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளமையும் குதிப்பிடத்தக்கது.
0000

Related posts:

எமது வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச உங்கள் வரவு அனுகூலமாகட்டும்  -  டக்ளஸ் தேவானந்தாவின் விஜயம் குறித...
ஐ.நா சபையின் விவசாய நடவடிக்கை பிரிவின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையா...
போலித் தமிழ் தேசிய வாதிகளால் மக்களிடமிருந்து பிரிக்கமுடியாத இமயமாக திகழும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிய...

முகமாலை பகுதியில் மிதிவெடிகளை அகற்றும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டியது அவசியமாகும்! டக்ளஸ் தேவான...
மின் கட்டணப் பட்டியல நீண்ட காலமாகக் கிடைத்திராத மக்களது பாக்கித் தொகைகளை மீளச் செலுத்துவதற்கு கால அவ...
இரண்டு வாரத்திற்குள் வடக்குக்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம் - அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ...