வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணியினர் முதலிடம்!
Friday, July 25th, 2025
வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணியினர் முதலாம் இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் கடந்த நான்கு நாட்களாக நடத்தப்பட்ட குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணியினர் 7 தங்கம் 6 வெள்ளி பதக்கங்களைப் பெற்று முதலாம் இடத்தை தமதாக்கி முல்லை மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
குறித்த போட்டியில் இரண்டாம் இடத்தை வவுனியா மாவட்டமும், மூன்றாம் இடத்தை கிளிநொச்சியும், ஆண்களுக்கான போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் அணியில் முதலாம் இடத்தை வவுனியாவும், இரண்டாம் இடத்தை யாழ்ப்பாணமும், மூன்றாம் இடத்தை முல்லைத்தீவு மாவட்ட அணியும் பெற்றுகொண்டமை குறிப்பிடதக்கது.
000
Related posts:
வடமாகாண ஆளுநரின் வாராந்த மக்கள் சந்திப்பு நடைபெறாது
சீனா செல்லத் தயாராகிறார் ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க - சீனக் கப்பல் சர்ச்சைக்கும் தீர்வு க...
தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான காலநிலை நிலவுவதால் அடுத்து வரும் சில தினங்களுக்கு அதிக மழையுடன...
|
|
|


