யாழ் செம்மணி பகுதியில் விபத்து இளைஞர் ஒருவர் உயிரிழப்பு
Monday, October 13th, 2025
யாழ் செம்மணியிப் பகுதியில் இன்று (13) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியே இவ் விபத்து சம்பவித்துள்ளது
யாழ்ப்பாணம் உடுத்துறையைப் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும் சிறந்த உதைப்பந்தாட்ட நடுவருமான யூட் வயது -27 என்பவரே உயிரிழந்துள்ளார்
உயிரிழந்தவரின் சடலம் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
இரத்த தானம் செய்யுமாறு இரத்த வங்கி வேண்டுகோள்!
பொது மக்களின் செயற்பாட்டினால் மீண்டும் கொரோனா அதிகரிக்கும் அபாயம் - எச்சரிக்கிறார் சுகாதார அமைச்சின...
2024 ஆம் ஆண்டிற்கானஉயர்தரப் பரீட்சையை நவம்பர் மாதம் நடத்துவதற்கு நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுசில் ...
|
|
|


