மூழ்கடிக்கப்பட்ட ‘டெனா’ போர்க்கப்பலில் பலியான 84 மாலுமிகளுக்கான இறுதி ஊர்வலம் தெஹ்ரானில்!
Monday, March 16th, 2026
….
கடந்த மார்ச் 4 ஆம் திகதி அமெரிக்காவினால் மூழ்கடிக்கப்பட்ட ‘டெனா’ (Dena) போர்க்கப்பலில்
பலியான 84 மாலுமிகளுக்கான இறுதி ஊர்வலம் இந்த வாரம் தெஹ்ரானில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இறுதி ஊர்வலம் புதன்கிழமை மத்திய தெஹ்ரானில் நடைபெறும் என்றும், அதற்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை மாலை தலைநகரின் முக்கிய சதுக்கங்களில் விடைபெறும் நிகழ்வுகள் நடைபெறும் என்றும் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச கடல் பகுதியில் ஆயுதங்கள் இன்றிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டொர்பிடோ (Torpedo) ரக ஏவுகணைத் தாக்குதலில் இந்த போர்க்கப்பல் சிதைவடைந்தது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மாலுமிகளின் உடல்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை முன்னெடுத்திருந்தது.
000
Related posts:
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித கைது!
நீதிமன்றங்களில் உள்ள சாட்சி கூண்டுகள் முழுமையாக அகற்றப்படும் - நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ...
முறையான பேருந்து தரிப்பிட விவகாரம் - வடக்கு மாகாணத்தில் தனியார் பேருந்து சேவைகள் அனைத்தும் முற்றாக இ...
|
|
|


