Warning: session_start(): open(/opt/alt/php73/var/lib/php/session/sess_778e319bb877fbc92fbdfdf0198006a8, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285

Warning: session_start(): Failed to read session data: files (path: /opt/alt/php73/var/lib/php/session) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285
மீளவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வங்காள விரிகுடாவில் உருவாகும்  - எதிர்வுகூறுகிறார் பிரதீபராஜா! - EPDP NEWS

மீளவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வங்காள விரிகுடாவில் உருவாகும்  – எதிர்வுகூறுகிறார் பிரதீபராஜா!

Sunday, May 17th, 2026


…..
எதிர்வரும் 30ஆம் திகதிக்கிடையில் மீளவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலையின் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.

அத்துடன் இதன் உறுதித் தன்மையை அடுத்த சில நாட்களின் பின்னரே குறிப்பிட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

நாளை ( 18.05.2026) முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, குருநாகல் மாவட்டங்களுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இதேவேளை 2026 தென்மேற்கு பருவக்காற்றின் உடைவு இலங்கையின் நிலப்பகுதிகளில் நாளை மறுதினமே(19.05.2026)  நிகழவுள்ளது.

இவ்வருட தென்மேற்கு பருவக்காற்று மழை இலங்கையின் சராசரியை அண்மித்ததாகவே கிடைக்கும் வாய்ப்புள்ளது.

சராசரியை விட 5-10 % குறைவாகவும் அமையலாம்.

மாதங்களின் அடிப்படையில் ஜுன், ஜுலை மாதங்கள் சராசரியை விட சற்று கூடுதலான அளவில் மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

ஆனால் ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் சராசரியை விட குறைவான அளவு மழைவீழ்ச்சியைப் பெறும் வாய்ப்புள்ளது.

வழமை போன்று இம்முறையும் தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் இலங்கையின் சப்ரகமுவ, தெற்கு, மேற்கு, வடமேற்கு மாகாணங்கள் மூன்று காலப்பகுதிகளில் அதீத மழையுடன் கூடிய வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்பைக் கொண்டுள்ளன.

அதனடிப்டையில் மே மாதம் 25ம் திகதி முதல்- ஜுன் 10 வரையான காலப்பகுதி

ஜுன் 20ம் திகதி முதல் ஜுலை 5 ஆம் திகதி வரையான பகுதி

மற்றும் ஜுலை 15ஆம் திகதி முதல் ஜூலை 25 ஆம் திகதி இருக்கின்றது.

அத்துடன் இது ஒரு நீண்ட கால முன்னறிவிப்பு என்பதனால் இதில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

எனைய பகுதிகளோடு ஒப்பிடும் போது இரத்தினபுரி, காலி,  களுத்துறை மாவட்டங்கள் 2026ம் வருட தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் அதிக மழையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை மாதத்தின் பிற்பகுதியில் இருந்து எல்நினோ நேர் நிலைக்கு வரும் வாய்ப்புள்ளது.

எல்நினோ என்பது தனித்து வரட்சியை மட்டுமல்ல, எதிர்பாராத வளிமண்டல குழப்பங்களோடு தொடர்புடையதாக மிகச்செறிவான மழைவீழ்ச்சியோடு கூடிய வெள்ள அனர்த்தங்களையும் உருவாக்க வல்லது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
000

Related posts:


இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் முன்பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதி - இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த அறிவ...
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் முச்சக்கர வண்டியின் முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 90 ரூபாவாக...
மின் கட்டண திருத்தம் - யோசனையை இன்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சா...