மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு – பெற்றோலின் விலை மறுபடியும் 300 ஐ கடந்தது!
Tuesday, July 1st, 2025
கடந்த நள்ளிரவுமுதல் (30) அமுலாகும் வகையில், மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப எரிபொருள் விலையை அதிகரிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாயாகும்.
மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 7 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 185 ரூபாயாகும்.
மேலும், ஒக்டென் 92 பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 305 ரூபாயாகும்.
000
Related posts:
புதிய சட்ட மூலத்திற்கு எதிராக மனு தாக்கல்!
இலங்கைக்கு புதிய இராஜதந்திரிகள் பலர் நியமனம்!
முட்டை இறக்குமதிக்கு தற்காலிக அனுமதி - வெதுப்பக துறையினருக்கு மட்டுமே வழங்கப்படும் என விவசாய அமைச்சு...
|
|
|


