மின்சார சபையில் உள்ள பொருளாதார கொலையாளிகளை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – மின்சார பாவனையாளர்கள் சங்கம் வலியுறுத்து!
Monday, December 23rd, 2024
இலங்கை மின்சார சபையில் உள்ள பொருளாதார கொலையாளிகளை நீக்குவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அந்த சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அதிகளவான இலாபத்தை ஈட்டியுள்ள இலங்கை மின்சார சபையினால் சுமார் 40 சதவீதமான சலுகைகளை மின்சார பாவனையாளர்களுக்கு வழங்க முடியும் தற்போது இலங்கை மின்சார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் நிலக்கரி மோசடியுடன் தொடர்புடையவர்.
இவ்வாறான பொருளாதார கொலையாளிகளைக் கண்டறிந்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உடனடியாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.
000
Related posts:
யாழில் பனை மரத்தில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் பரிதாப மரணம்!
நாளை நள்ளிரவு முதல் புகையிரத பணிப்புறக்கணிப்பு!
அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 இந்திய மீனவர்கள் நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியி...
|
|
|


