மின்சார கட்டணத்தைக் குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது!

Wednesday, October 30th, 2024

எஞ்சிய வருடங்களில் மின்சார கட்டணத்தைக் குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை வணிக சபையின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான திட்டங்களை வகுக்குமாறு அவர் உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்போது, இலங்கை வணிக சபையினர் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

000

Related posts: