மதுபோதையில் பேருந்தை செலுத்திச் சென்ற இ.போ.ச சாரதி –  வழிமறித்து ஊர்காவற்றுறை  பொலிசாரால் கைது!

Monday, January 5th, 2026


……
ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் அரச பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வழித்தடம் 777, இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி ஒருவர்
மதுபோதையில் பேருந்தை செலுத்திச் சென்ற நிலையில் இன்று (4) ஊர்காவற்றுறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (4) மாலை 4.30 மணியளவில் யாழ் – ஊர்காவற்றுறை வீதியின் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து பொலிசாரிடம் வினவியபோது –

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் இடையிலான சேவையை முன்னெடுக்கும்  வழித்தடம் 777 இலக்க பேருந்தை செலுத்திச் சென்ற சாரதியே குறித்த சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அரச பேருந்து அதி வேகத்தில் அதிகளவான பயணிகளுடன் செல்வதை அவதானித்த ஊர்காவற்றுறை போக்குவரத்து பொறுப்பதிகாரி சமன் குமார தலைமையிலான பொலிஸ் அணியினர் பேருந்தை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.

சோதனையின் போது சாரதியிடம் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாதிருந்துள்ளது. அத்துடன் அவர் நிறை போதையில் இருந்ததை அவதானித்த பொலிசார் அவரை மது போதையில் சாரதித்துவம் செய்தமை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை உள்ளிட்ட காரணங்களுக்காக கைது செய்து ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

பொலிசாரின் விசாரணைகளின் பின் குறித்த சாரதி ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.
00

Related posts:


தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்திய வெளிவிவகார ...
சிரேஷ்ட பிரஜைகளின் நிதி நிலைமைக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் நடவடிக்கை உள்நாட்டு இறைவரித் திணைக்...
கடற்றொழிலாளர் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன? - ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் ...