பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு !
Saturday, October 26th, 2024
நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாளை (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை உறுப்பினர்கள் அனைவரையும் வரவழைக்கும் உத்தரவு அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி நேற்று (25) வெளியிட்டார்.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12வது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி தீவின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் அது தொடர்பான உள்ளுர் நிலைகளிலும் பொது ஒழுங்கைப் பேணுவதற்கு ஆயுதப்படைகள் அழைக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
சாலாவ இராணுவ முகாம் தீ விபத்து: சேத விபரங்கள் மதிப்பீடு நிறைவு!
நாட்டில் அதிகரிக்கும் வெப்பம் - மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம்!
கொரோனா அச்சுறுத்தல் - வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கு அபாய எச்சரிக்கை!
|
|
|


