பொதுத் தேர்தலில் புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துங்கள்- தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!
Wednesday, November 13th, 2024
நாளையதினம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும்போது, புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும்போது 1,2,3 என இலக்கங்கள் அல்லது புள்ளடி பயன்படுத்தப்பட்டன. இதனால் பலரும் குழப்பத்துக்கு உள்ளாகியிருந்தனர்.
எவ்வாறாயினும், நாளையதினம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும்போதும், விருப்பு வாக்குகளை வழங்கும்போதும் புள்ளடியை மாத்திரமே பயன்படுத்த வேண்டும்.
எனவே உரிய முறையை பின்பற்றி அளிக்கும் வாக்கினை செல்லுபடியாகும் வாக்காக வாக்காளர்கள் மாற்ற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
000
Related posts:
பாராளுமன்றத்தைக் கலைத்தால் 70 எம்.பிக்களுக்கு ஓய்வூதியமில்லை!
புதிய திட்டங்களை போக்குவரத்து அமைச்சு தயாரித்து அதனை துரிதமாக செயற்படுத்த வேண்டும் – ஜனாதிபதி கோட்டா...
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மே மாதம் முதல் வாரத்தில் வெட்டுப்புள்ளி வெளியாகும...
|
|
|


