Warning: session_start(): open(/opt/alt/php73/var/lib/php/session/sess_80e35a93c10ed0958314bab1f2a4c057, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285

Warning: session_start(): Failed to read session data: files (path: /opt/alt/php73/var/lib/php/session) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285
பொதுச் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள 100 ) தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்!  - EPDP NEWS

பொதுச் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள 100 ) தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்! 

Friday, June 12th, 2026



அரசாங்க பொதுச் சேவையில் நிலவும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் வகையில், ஜூன் மாதம் 15 ஆம் திகதி 100 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் சந்தன அபேரத்ன ,பொதுச்சேவையில் தற்போது நிலவி வரும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதே இந்த வேலைவாய்ப்புகளின் முதன்மை நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றுக்கு மேலதிகமாக, தகுதிவாய்ந்த 1,600 முகாமைத்துவ உதவி உத்தியோகத்தர்களுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்கள் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
0000

Related posts: