பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியை நீக்குமாறு கோரி   நிதியமைச்சிடம் கடிதம்!

Friday, January 3rd, 2025

பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் எனப்படும் பெறுமதி சேர் வரியை நீக்குமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நிதியமைச்சிடம் கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் சந்தரஜித் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சந்தையில், பாடசாலை உபகரணங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகப் பெற்றோர் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறான பின்னணியில், குறித்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வொன்றை வழங்குமாறு அவர் கோரியுள்ளார்.

பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் எனப்படும் பெறுமதி சேர் வரியை நீக்குவதற்கான கடிதம் ஒன்று நேற்று (02) நிதியமைச்சிடம் வழங்கப்பட்டுள்ளது. 

பாடசாலை உபகரணங்களுக்கும் 18 சதவீத வற் வரி விதிக்கப்பட்டுள்ளது குறித்த வரி நீக்கப்பட வேண்டும். அதற்காகவே நாம் கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளோம்.

தற்போதைய அரசாங்கம் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்தது போல, குறித்த வற் வரி நீக்கப்பட வேண்டும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் சந்தரஜித் வலியுறுத்தியுள்ளார்

00

Related posts:

ஓகஸ்ட் - டிசம்பர் மாதங்களில் பாடசாலை நாட்களை அதிகரிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ...
வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா செப்டம்பர் 24 ஆம் திகதி கொடியேற்றத்துட...
நாடாளுமன்றத் தேர்தலை நடத்த 11 பில்லியன் ரூபாய் செலவாகும் - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்...