நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை !………

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்தோடு இன்று (04) மாலை இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே, பலத்த மழை, பலத்த காற்று மற்றும் பலத்த மின்னல் தாக்கங்கள் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
000
Related posts:
நிலைமைகளை ஊடகங்கள் புரிந்தகொள்ள வேண்டும் - பிரதமர்!
எரிபொருள் மானியம் தொடர்பில் விசேட அறிவிப்பு - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
பொலிஸ் அதிகாரம் தொடர்பில் தற்போது பேச முடியாது.- பேசினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது - தமி...
|
|