நாடளாவிய ரீதியில் 40,494 டெங்கு நோயாளர்கள் பதிவு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Sunday, October 13th, 2024

இந்த வருடத்தில் இதுவரை 40,494 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்ச தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், அதிகளவான நோயாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அதன் எண்ணிக்கை 17,159 எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 10,150 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: