நாகர்கோவில் மேற்கு பகுதியில் தீயில் எரிந்த வீடு – விசமிகளால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் குடும்பஸ்தர்!

Thursday, January 23rd, 2025

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு பகுதியில் வீடு ஒன்று  நேற்று (22) அதிகாலை தீப்பிடித்துள்ளது.

அதிகாலை 3.30 மணியளவில் வீடு தீப்பிடிப்பதை கண்ட குடும்பஸ்தர் கடும் முயற்சியின் பின் தீயை அணைத்துள்ளார்.

விசமிகளால் தனது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் குடும்பஸ்தர் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிசார் தீ பிடித்த வீட்டை பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

000

Related posts:


இனப் பிரச்சினைக்குத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வினை வழங்க வேண்டும்:  யாழில் ஜோசப் ஸ்...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கருப்புப் பெட்டி மீட்பு - எண்ணெய் கசிவு ஏற்பட்டால் எதிர்கொள்வதற்கு சர்வதே...
செஸ் வரி அதிகரிக்கப்பட்டாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படாது - நிதி இராஜாங்க அமை...