தோழர் தேவானந்தாவின் அரசியல் இருப்பு அவசியமானது.- மாவைகலட்டியில் வலியுறுத்து!
Monday, June 15th, 2026~~~~
மக்களுக்கு சேவை செய்வதற்கான அதிகார பலத்தினை மீண்டும் மக்கள் வழங்குவார்கள் என்று ஈ.பிடி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கையை வெளியிட்டார்.
வலி வடக்கு மாவை கலட்டி, உதயதாரகை விளையாட்டுக் கழகத்தினால் நேற்று(14.06.2026) நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், மாவைகலட்டி கிராமம் மீள்குடியேற்றப்பட்ட காலத்தில் இருந்த நிலையுடன் ஒப்பிடுகின்றபோது, எமது தொடர்ச்சியான முயற்சியின் பலனாக, ஏற்பட்டுள்ள தற்போதைய வளர்ச்சி மகிழ்ச்சியளிப்பதாகவும், கடந்த காலங்களைப் போன்றே எதிர்காலத்திலும் இந்தக் கிராமத்தின் வளர்ச்சியில் தன்னுடைய பங்களிப்பு இருக்கும் எனவும் தெரிவித்தார்.
அதேவேளை, குறித்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அனைவரும் தமது உரையில், தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கடந்த கால மக்கள்நலச் செயற்பாடுகளை நினைவுபடுத்தியதுடன், அவர் அரசியலில் தொடர வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


