தொல்புரத்தில் இருவருக்கு இடையயே மோதல்; – ஒருவர் உயிரிழப்பு!
Monday, April 13th, 2026யாழ்ப்பாணம் சுழிபுரம் தொல்புரத்தில் இருவருக்கு இடையில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு 11 மணியளவில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில் இரண்டு இளைஞர்களுக்கு இடையில் குடும்ப தகராறு காரணமான வாய் திறக்கம் ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டனர்.
இதன்போது மயூரன் என்பவர் உயிரிழந்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவத்தினை அப்பகுதியை சேர்ந்த தபேசன் ராஜீவன் என்பவர் மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் கைதான சந்தேக நபரை இன்றைய தினம் மல்ல்கம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
Related posts:
அமைச்சர்கள் இலவசமாக பயணிக்க முடியாது !
13 ஆவது சட்டத்தை மேலும் வலுவாக கொண்டு செல்லமுடியாமைக்கு தமிழ் தரப்பினரே முக்கிய காரணமாக இருந்திருக்...
பல்வேறு மோசடி சம்பவங்கள் - மாதாந்தம் 100 பேருந்து நடத்துனர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக இலங...
|
|
|


