தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் – யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் சந்திப்பு!
Wednesday, October 9th, 2024
யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ம.பிரதீபனை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க யாழ். மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தக் கலந்துரையாடலின் போது தற்போதைய வேட்புமனு கையேற்பு தொடர்பாகவும் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் நாடாளுமன்ற தேர்தலுக்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் அவர்கள் கலந்துரையாடினர்.
இந்தக் கலந்துரையாடலில் தேர்தல்கள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளார் எஸ்.அச்சுதனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
கல்வி முறையில் மாற்ற வேண்டும் - கல்வி அமைச்சர்!
மூன்று புதிய தூதுவர்கள் நியமனம்!
இவ்வாரமும் அரச மற்றும் தனியார் துறைகளின் பணிக்கான சேவைகள் தொடரும் - புகையிரத திணைக்களம் தெரிவிப்பு!
|
|
|


