துருக்கி விருந்தத்தில்தீப்பரவல் – 76 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயம்!
Wednesday, January 22nd, 2025
துருக்கியில் உள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 76 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விருந்தகத்தின் 12ஆவது மாடியில் தீப்பரவல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீப்பரவல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் 12ஆவது மாடியில் இருந்து யன்னல் ஊடாக தப்பிப்பதற்கு முயற்சித்த இருவரும் உயிரிழந்தனர்.
தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், 12 மணித்தியாலங்களுக்குப் பின்னர் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதேநேரம், குறித்த விருந்தகத்தின் உரிமையாளர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் துருக்கி பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
000
Related posts:
ஏப்ரல் 20இல் தினத்தில் பாடசலைகளை ஆரம்பிக்க முடியாது - அரசாங்கம் !
பத்திரிகை பேரவை சட்டத்தை சகல ஊடகங்களுக்கும் ஏற்புடைய விதத்தில் ஊடகக் பேரவை சட்டமாக மறுசீரமைப்பது தொட...
வடக்கை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றுவதே நோக்கம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
|
|
|


