சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை – 2025 பெப்ரவரி வரை அமுலில் இருக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

Tuesday, October 22nd, 2024

சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை அமுலில் இருக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று தற்போது 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

நகர்ப்புறங்களை அண்மித்த பகுதிகளில் குறைந்த விலையில் தேங்காயை விற்பனை செய்வதற்கான விசேட வேலைத்திட்டத்தை எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கவுள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

000

Related posts: