காவோலைகள் போடப்பட்டு வீதி புனரமைப்பு – வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் புதிய தொழில் நுட்பத்தால் மக்கள் அதிர்ச்சி!

Tuesday, December 17th, 2024

வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் உள்ள சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை அல்லாரை பிரதான வீதி தற்போது புனரமைக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதி புனரமைக்கப்படுகின்ற பொழுது வீதியின் குறிப்பிட்ட சில இடங்களில் ஒரு அடி ஆழமான நீளமான குழிகள் தோண்டப்பட்டு, அதற்குள் காவோலைகள் போடப்பட்டு அதற்கு மேலாக கற்கள் போடப்பட்டு வீதி புனரமைப்பது பொதுமக்களிடையே ஆச்சரியத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான முறையில் பிரதான வீதி ஒன்று புனரமைக்கப்படுமா என்று மக்கள் விசனத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதோடு அதற்கான விளக்கத்தையும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் சாவகச்சேரி மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


செட்டிகுளம் பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை இரத்து செய்ய கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் – சாதகமான பதில் பெற்...
இருந்த வீடுகளையும் எமது மக்கள் இழப்பதற்கு பணப்பெட்டி அரசியலே காரணம் - பருத்தித்துறை பிரதேச சபையின் ம...
இலங்கையில் விருந்தோம்பல் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் – பி...