கடவுச்சொற்களை பகிர வேண்டாம் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

இலங்கையில் சைபர் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் கணனி அவசர பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
குறித்த பிரிவின் அறிக்கையின்படி 2025ஆம் ஆண்டில் மாத்திரம் 5400க்கும் மேற்பட்ட சைபர் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
Facebook, WhatsApp, Instagram, Snapchat மற்றும் TikTok போன்ற சமூக ஊடக தளங்களை மையப்படுத்தியே இந்த குற்றங்கள் பதிவாகியுள்ளன.
அதிலும் Facebook உடன் தொடர்புடையதாக 90 வீதக்குற்றங்கள் பதிவாகியுள்ளன.
AI என்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளின் தவறான பயன்பாடும் இந்த குற்றங்களில் அடங்கியுள்ளதாக கணினி அவசர சேவைப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதனை கருத்திற்கொண்டு பயனர்கள் கடவுச்சொற்களை ஒருபோதும் பகிர வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
000
Related posts:
கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று!
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அனுப்பப்பட்ட 49 மாதிரிகளில் 43 பேருக்கு டெல்டா தொற்றுறுதி - மாவட்ட ப...
பொறுப்பற்ற சிலரின் செயற்பாடுகளால் நாடு எந்த நேரத்திலும் முடக்கப்படலாம் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்...
|
|