இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்கள் – மீள் பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவையில்!

இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்களை பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாளை (6) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படும் என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பிலேயே இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் அலகு ஒன்றுக்கு 8.26 சதம் டொலர் வீதம் செலுத்துவதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை இணக்கம் தெரிவித்திருந்தது.
குறித்த உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்வதற்காக இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
000
Related posts:
ஜப்பான் பிரதமரின் விசேட ஆலோசகர் கென்ரோரோ ஷோனுரா இலங்கைக்கு!
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் வட பிராந்திய முகாமையாளர் கைது!
முன்னேற்றப் பயணத்தை தொடர்வதா இல்லையா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்...
|
|