ஆறுதல் நலன்புரி திட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம்!
Saturday, November 23rd, 2024
அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஏற்கனவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தவறியவர்கள் நாளைமறுதினம் (25) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அஸ்வெசும நலன்புரி திட்டப் பயனாளர்களுக்கான குறைகளைச் சமர்ப்பிப்பதற்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாளைமறுதினம்முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை குறைபாடுகளைத் தெரிவிக்க முடியும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
00
Related posts:
கடற்படையினரால் பார்வை வில்லைகள் அன்பளிப்பு!
மீண்டும் முளைக்கும் இராணுவ காவலரண்கள் – குழப்பத்தில் குடாநாட்டு மக்கள்!
நாட்டில் மேலும் சில ஒமிக்ரொன் தொற்றாளர்கள் இருக்கலாம் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை...
|
|
|


