அமரர் சரசு கதிரவேலுவின் பூதவுடலுக்கு மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம்!

Friday, July 3rd, 2026



பனை தென்னை கூட்டுறவு அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் சுதாகரனின் தாயார் அமரர் சரசு கதிரவேலுவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இளவாலை சேந்தாங்குளத்தை சேர்ந்த அமரர் சரசு கதிரவேலு கடந்த 02.07.2026 அன்று தனது 82 ஆவது வயதில் வயது மூப்பின் காரணமாக காலமானார்.

இன்நிலையில் அமரரின் பூதவுடல் சேந்தாங்குளத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அமரரது உறவுகளுக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார்.

அமரருக்கான அஞ்சலியின்போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் வலி வடக்கு நிர்வாக செயலாளர் அன்பு – ஜெயபாலசிங்கம் கட்சியின் வலி தென்மேற்கு பிரதேச  நிர்வாக செயலாளர் வெலிச்சோர் அன்ரன் ஜோண்சன் – ஜீவா ஆகியோருடன் கட்சியின் வலி வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஸ்ரீதரன் மற்றும் முக்கியஸ்தர்கள் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


0000

Related posts: