அனுசியா ஜெயகாந்தின் தந்தையாரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Friday, May 29th, 2026
……
வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் அவர்களின் தந்தையார் “சபாபதி துரைஐயா”வின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தினார்.
அமரர் சபாபதி துரைஐயா வயதுமூப்பின் காரணமாக தனது 76 ஆவது வயதில் கடந்த 26 ஆம் நாளன்று காலமானார்.
இன்நிலையில் அமரரது பூதவுடல், 6 ஆம் வட்டாரம் வேலணை மேற்கு, வேலணையில் உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(29) அங்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் பூதவுடலுக்கு மலர்மாலை அணிவித்து தனது அஞ்சலியை செலுத்தியதுடன் குடும்ப உதவுகளுக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.
இதன்போது கட்சியின் சிரேஸ்ட முக்கியஸ்தர் விந்தன், யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச நிர்வாக செயலாளர் மருதயினார் ஜெயகாந்தன், வேலணை பிரதேச நிர்வாக செயலாளர் சின்னையா சிவராசா, யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக செயலாளர் றீகன் இளங்கோ, கட்சியின் யாழ் தலைமை அலுவலக நிர்வாக பொறுப்பாளர் வசந்தன், கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் சிரேஸ்ட தோழர்கள் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


