பிரேசிலை உலுக்கும் கொரோனா – 32 இலட்சத்தை நெருங்கும் நோயாளர்கள்!
 Friday, August 14th, 2020
        
                    Friday, August 14th, 2020
            
பிரேசிலில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 31.50 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், பிரேசிலில் ஒரே நாளில் 58 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 31.70 லட்சத்தைக் கடந்துள்ளது.
ஒரே நாளில் 1,160-க்கும் அதிகமானோர் பலியானதை தொடர்ந்து, அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.04 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை கடந்துள்ளது.
Related posts:
கிரிக்கட் வீரர் கிறிஸ்தோபர் பிரேமன் கொலை:  மூவருக்கு 15 வருட சிறை!
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வர்த்தகர்களுடனான கலந்துரையாடல் ஆரம்பம்!
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        