செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வர்த்தகர்களுடனான கலந்துரையாடல் ஆரம்பம்!

Tuesday, October 10th, 2017

யாழ்.மாநகர வர்த்தகர்களுடனான விஷேட கலந்துரையாடல் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

யாழ் மாநகர வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஏற்பாட்டில் இவ் விசேட கலந்தரையாடல் கட்சியின் யாழ்ப்பாணத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுவருகின்றது.

“யாழ். வர்த்தக சமூகத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற தலைப்பில்  யாழ்ப்பாணத்தின் வர்த்தகர்கள் அண்மைக்காலமாக எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தடைகள் தொடர்பாகவும் அவற்றை ஆரோக்கியமான வகையில் எதிரிகொண்டு வெற்றிகொள்வது தொடர்பாகவும் யாழ் வர்த்தகர்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்டன் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளை யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்கணராஜா மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: