நம்பிக்கையோடு வந்திருக்கும் மக்களின் நம்பிக்கை வீண்போகாது: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

நம்பிக்கையோடு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பரப்புரைக் கூட்டத்திற்கு திரண்டு வந்திருக்கும் வட்டுக்கோட்டை மக்களின் திரட்சி மாற்றத்திற்கான அடையாளமாகத் தெரிகிறது.
இந்த மாற்றத்தை ஏற்படுத்த தயாராக இருக்கும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் என்றும் வீண் போகாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் வீணைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியினருக்கு ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில் வட்டுக்கோட்டை, சித்தங்கேணி பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பரப்புரை கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
Related posts:
அடையாள உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவந்தார் டக்ளஸ் தேவானந்தா!
அணு ஆயுத பரிசோதனையை நிறுத்த முடியாது- வட கொரியா!
மீனின் விலை அதிகரிப்பு!
|
|