காப்புறுதி நிறுவனங்கள் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும் – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Monday, October 9th, 2017

 

காப்புறுதித் திட்டங்கள் விவசாயிகளுக்கு இருப்பது போல, கடற்தொழிலாளர்களுக்கும் தெங்கு, பனந்தொழில் வல்லுநர்களுக்கும் காப்புறுதித் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமாகவுள்ளது. அத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வாழ்க்கைக்குப் பாதுகாப்பாகவும் துரதிஸ்டவசமாக சடுதியான தொழில்சார் அனர்த்தங்களும் மரணங்களும் ஏற்படும்பொழுது இழப்பீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு அத்தொழிலாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த உதவியாக இருக்கும் என்று செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

இன்று(09.10.2017) நாடாளுமன்றத்தில் காப்புறுதி தொழில் ஒழுங்குபடுத்தல் விவாதத்தில் பங்குகொண்டு உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,அரசாங்கம் சுரக்~h மாணவர் காப்புறுதி திட்டத்தை உலக சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அலரி மாளிகையில் அங்குரார்ப்பணம் செய்தது வரவேற்கத்தக்கதாகும்.

‘தேசத்தின் பிள்ளைகளை நிதமும் பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் சுரக்~h காப்புறுதித் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள 11 ஆயிரத்து 242 அரசாங்கப் பாடசாலைகளில் கல்விபயிலும் ஏறத்தாள 45 இலட்சம் 5 வயது முதல் 19 வயதான மாணவர்கள் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நாட்டின் இலவசக் கல்வித் திட்டத்தில் இன்னுமொரு மைல்கல்லாகும்.  இத்திட்டத்தின் ஊடாக 24 மணித்தியாலயமும் செயற்படும் காப்புறுதித் திட்டமாக அமைந்திருப்பதுடன், அரசாங்க வைத்திய சாலைகளில் சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு 30 நாட்கள் வரை தினமொன்றிற்கு 1000.00 வழங்கப்படவிருப்பது மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

இருந்தபோதும் கவர்ச்சியாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தக் காப்புறுதித் திட்டத்தின் நன்மைகளை பெற்றோர்கள் எவ்வாறு உரிய காலத்தில் பெற்றுக்கொள்வது என்பற்கான செயற்பாட்டுப் பொறிமுறை ஏற்படுத்தப்பட்டு, இலகுவான வழிகாட்டல் பெற்றோருக்கு வழங்கப்பட வேண்டும்.

எனவே சுரக்~h காப்புறுதித் திட்டம் வெற்றிகரமாக அமையவும், மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையவும் வேண்டுமாக இருந்தால் பாடசாலைகளில் காப்புறுதிக்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்வதிலும், மருத்துவமனையில் உறுதிப்படுத்தல்களைச் செய்வதிலும் பெற்றோர் தேவையற்ற அலைச்சல்களைச் சந்திக்க நேர்ந்தால், மாணவர்களுக்கு காப்புறுதியின் பயன் கிடைக்காது.

இந்த நாட்டில் வரவேற்கத்தகுந்த பல மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தாலும், அந்தத் திட்டத்தைக் குறிக்கும் சந்தைப்படுத்தும் சொற்களானது உரிய தமிழ் வடிவத்தில் அரச ஆவணங்களில் குறிப்பிடப்படாத படியினால் தமிழ் பேசும் எமது மக்களால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியாதுள்ளது. கடந்த காலத்தில் “திவிநெகும” எனும் சொல் முன்வைக்கப்பட்டபோது அதை தமிழில் “வாழ்வின் எழுச்சி” என்று தமிழ் மொழியில் மாற்றியமைக்கும் எமது முயற்சி அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்பொழுது நடைமுறையிலுள்ளமை தாங்கள் அனைவரும் அறிந்ததே.

இப்போது மாணவர்களுக்கான “சுரக்~h” அறிமுகப்படுத்தப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் “சுரக்~h” என்பதன் அர்த்தத்தை விளங்கிக் கொண்டு தமிழ்பேசும் மக்கள் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வசதியாக அந்தச் சொல் தமிழில் எவ்வாறு குறிப்பிடப்படுவது என்பதை அரசு தீர்மானிக்க வேண்டும். சிலர் “சுரக்~h” என்பதற்கு “உயிர்காப்பு” என்று கூறுகின்றார்கள் அது சரிதானா? என்பதை சம்மந்தப்பட்ட அமைச்சர் உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும்.

துரதி~;டவசமாக தற்போது நாட்டில் இருக்கும் காப்புறுதி நிறுவனங்களில் காப்புறுதி பெற்றுக்கொள்ளும் ஒருவர், தொடர்ந்து பணத்தை செலுத்த முடியாத நிலையேற்படும்போது, அதுவரை தன்னால் செலுத்தப்பட்ட பணத்தை மீளப்பெற்றுக்கொள்ள எந்த வழிவகையும் உத்தரவாதமும் இல்லை. இந்த நிலைமை அமைச்சர் அவர்களால் கவனத்தில் கொள்ளப்பட்டு மக்கள் செலுத்தும் பணத்திற்கு காப்புறுதி நிறுவனங்கள் உத்தரவாதமளிக்க தேவையான நவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் என்றும் தெரிவித்தார்

Related posts:


ஈ.பி.டி.பியின் பொறுப்பாளர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விச...
காணி விவகாரங்களில் இஸ்டத்திற்கு நடந்துகொள்ள முடியாது - அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு!
பிரதிநிதிகள் அனைவருக்கும் மக்களது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய தார்மீகக் கடமை இருக்கின்றது - அமைச்...