எரிமலை வெடித்து 82 வீடுகள் இறுகிப்போயின!
Monday, May 28th, 2018ஹவாய்த் தீவில் கிலோவா எரிமலை வெடித்துப் பாறைக்குழம்பு வழிந்தோடியதில் 82 வீடுகள் எரிந்து பாறையாக இறுகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலோவா எரிமலை உள்ளது. 1975ல் இருந்தே இந்த தீவில் எரிமலை வெடிக்கும் நிலையில் இருந்தது. அந்த கிலோவா எரிமலை கடந்த ஒரு மாதமாக வெடித்து பாறைக் குழம்பைக் கக்கி வருகிறது.
நேற்று பாறை குழம்பை கக்கியதில் அப்பகுதியில் உள்ள 82 வீடுகளை எரித்தது. அந்த வீடுகளில் இருந்தவர்கள் முன்கூட்டியே வெளியேறிவிட்டதால் உயிரிழப்பு ஏதுமில்லை. ஹவாய்த் தீவில் எரிமலை வெடித்த பகுதிகளில் இருந்து நாலாயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Related posts:
இளைஞர்களின் வளர்ச்சியும் தீர்க்கமான சிந்தனையும் தான் எதிர் காலத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்கும் - ஈ....
துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு!
துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு!
|
|