2018 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதிய சான்றிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன!

Wednesday, January 10th, 2018

வலி. மேற்கு சங்கானைப் பிரதேச செயலக ஓய்வூதியர்களுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதிய சான்றிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஓய்வூதியக் கொடுப்பனவு விவரங்கள் தொலைபேசியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் ஓய்வூதியர்கள் வதிவிடச் சான்றிதழுடன் கையடக்கத் தொலைபேசி இலக்கத்தையும் குறிப்பிடவும். ஏனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் கிராம அலுவலரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் கையடக்கத் தொலைபேசிக்கு ஓய்வூதியக் கொடுப்பனவு விவரங்கள் அனுப்பி வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதன் இலக்கத்தைக் கட்டாயமாகக் குறிப்பிடல் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சமர்ப்பிப்பதற்குத் தவறும் பட்சத்தில் எதிர்வரும் ஏப்ரலிலிருந்து ஓய்வூதியக் கொடுப்பனவு நிறுத்தப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts: