அடுத்த மாதம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வவுச்சர்கள்!

Monday, November 6th, 2017

அடுத்த வருடத்திற்கான பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்கள் அடுத்த மாதம் 2ஆம் திகதி விநியோகிக்கப்படவுள்ளது.

தற்சமயம் இந்த வவுச்சர்களை அச்சிடும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன. இது விடயம் குறித்து ஆராயவும் இதன் முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ளவும் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை சீருடை வவுச்சர் விநியோகம் தொடர்பான அறிவித்தல்கள் அடுத்து வரும் இரண்டு வார காலத்திற்குள் அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

Related posts: