வித்தியா கொலை தீர்ப்பு வெளியானது: விஜயகலா  மகேஸ்வரனுக்கும் ஆப்பு வைத்தார் இளஞ்செழியன்!

Wednesday, September 27th, 2017

மாணவி வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ்குமாரை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் காப்பாற்ற முயற்சித்ததானது முறையற்றது என   நீதிபதி இளஞ்செழியன் விமர்சனம் செய்துள்ளார்.

வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின்தீர்ப்பு வெளியான நிலையில்  தீர்ப்பாயத்தின் நீதிபதிமா. இளஞ்செழியன் 345 பக்கங்களை கொண்ட தனது தனிப்பட்ட தீர்ப்பின் சுருக்கத்தை வாசித்தார். அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நடவடிக்கை சுவிஸ்குமார் என்றுஅழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமாரை தப்பிக்க வைக்கும் முதலாவது நடவடிக்கை. பொதுமக்கள் சுவிஸ்குமாரை கட்டி வைத்து தாக்கிய போது அங்கு சென்ற இராஜாங்க அமைச்சர்விஜயகலா மகேஸ்வரன் கட்டை அவிழ்த்து விடுமாறு பொது மக்களை கோரியுள்ளார். அதுநல்ல விடயம். ஆனால் சந்தேகநபரை பொலிஸாரிடம் ஒப்படைக்கவோ மேற்கொண்டுநடவடிக்கை எடுக்கவோ இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை சந்தேகநபரான மகாலிங்கம் சசிக்குமார் நீதிமன்றில் தெரிவித்திருந்தார். பொதுமக்களிடம் சசிக்குமாரை அவிழ்த்து விடுமாறு கூறிய விஜயகலா மகேஸ்வரன் சசிக்குமாரின் உறவினர்கள் வந்து அவரை அழைத்துச் செல்லும் வரை சுமார் 2 மணி நேரம்இரவு 11 மணியில் இருந்து 1 மணி வரை வீதியில் காத்திருந்துள்ளார். இராஜாங்க அமைச்சரின்இந்த நடவடிக்கை சந்தேகநபராக ம.சசிகுமாரை தப்பிக்க வைக்கும் முதலாவது நடவடிக்கை எனநீதிபதி இளங்செழியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: