யாழ். மத்திய கல்லூரி உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில்!

Wednesday, April 4th, 2018

யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தால் க.பொ.த (உ.த) 2020 பிரிவில் கற்கவுள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.

க.பொ.த (சா.த) 2017 பரீட்சையில் 9ஏ சித்திகளைப் பெற்று யாழ் மத்திய கல்லூரியில் க.பொ.த (உ.த) 2020 இல் கல்வியைத் தொடரவுள்ள மாணவர்களுக்கே மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா வீதம் 28 மாதங்களுக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது.

இதில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் வருமானம் குறைந்த மாணவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. மேலதிக விவரங்களை கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளரிடம் பெற்றுக்கொள்ள முடியும்.

இப்புலமைப் பரிசில் திட்டத்திற்கு உதவி வழங்க விரும்புவோர் பழைய மாணவர் சங்கத் தலைவர் சொலமன் (0772334215), உதவி செயலாளர் சுபேதர் பெர்னான்டோ (0772528824), பொருளாளர் கபில்நேசன் (0771457159) மற்றும் 0777642379 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts: