யாழ்ப்பாண இளைஞன் டுபாயில் உயிரிழப்பு!

Tuesday, January 16th, 2018

யாழ்ப்பாணம் அல்லாரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை டுபாயில் உயிரிழந்தார்.

காய்ச்சலே இவரது உயிரிழப்புக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது. சுதந்திரலிங்கம் தினேஸ் (வயது ௲ 28) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.

உயிரிழப்பதற்கு முந்தைய நாள் இவர் குடும்பத்தினருடன் தொலைபேசியில் உரையாடினார், என்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்று கூறினார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மறுநாள் அவரை குடும்பத்தினர் தொடர்புகொள்ள முயற்சித்த போது முடியவில்லை என்றும், இளைஞருடன் இருந்த நண்பர்கள் மூலம் அவர் உயிரிழந்தமை தெரிய வந்தது என்றும் கூறப்பட்டது. இளைஞரின் உடலை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related posts:

சமூகத்தை நல்வழிப்படுத்த அனைவரும் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் - சங்கானைக் கல்விக் கோட்ட அதிபர் ...
திருக்கேதீச்சர சம்பவம் ஆழ்ந்த அதிர்ச்சியைத் தருகிறது - யாழ்ப்பாணம் மறைமாவட்டம் குரு முதல்வர்!
அமெரிக்காவுக்கான விஜயம், சர்வதேச நாணய நிதியத்துடன் மாத்திரம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அல்ல - நித...