அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு?
Thursday, April 19th, 2018மஹரகம புற்றுநோய் மருத்துவமனையில் சில அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டதாக நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் ஊடாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சில மருந்துகளுக்கே தட்டுப்பாடு நிலவுவதாகவும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு மருந்துகளைபெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது எனவும் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையின் விசேட மருத்துவர் வில்ப்ரட் குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இவ்வார இறுதியில் குறித்த மருந்துகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இவ் வருடம் சந்திக்கவுள்ள முதல் தேர்தல்?
மட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு - மாவட்ட பிராந்திய சுகாதார சேவை...
இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல - இரு நாடுகளும் நெருங்கிய கூட்டாளிகள் - சீன வெளியுறவு அமை...
|
|