மேய்ச்சல் தரவைக்கு அடையாளப்படுத்தப்படும் இடம் பொருத்தப்பாடற்றதாக அமைகின்றது – கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்!
Saturday, June 2nd, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகளை அமைப்பதில் இருக்கின்ற இடர்பாடுகள் காரணமாக பண்ணையாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் அமைக்கப்படாமையினால் பண்ணையாளர்கள் தங்களுடைய கால்நடைகளை பராமரிப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
இந்நிலையில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் தொடர்பில் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் அமைப்பதற்கு கடந்த 2015 ஆம் ஆண்டில் அரசாங்க அதிபர் தலைமையில் 1100 ஏக்கர் மேய்ச்சல் தரவை இனங்காணப்பட்டதாகவும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மன்னாகண்டல், உடையார்கட்டு போன்ற இடங்களில் மேய்ச்சல் தரவைகள் இனங்காணப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட போதும் வனவளத் திணைக்களத்தினால் அது பொருத்தப்பாடற்ற இடமாகக் காட்டப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது.
கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள குமுழமுனைப் பிரதேசத்தில் 500 ஏக்கர் நிலப்பகுதி அடையாளம் காணப்பட்டபோதும் இவற்றை அமைப்பதற்கான சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் அனுமதிகளை வழங்காமையினால் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் அமைக்க முடியாதிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|
|


