மீண்டும் அவகாசம் : நாளை தபால் மூல வாக்களிப்பு!

Wednesday, January 31st, 2018

நாளை(01) மற்றும் நளைமறுதினம்(02) தபால் மூல வாக்குகளை பதிவுசெய்ய முடியுமென பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் கூறியுள்ளார்.

தமது மாவட்டங்களில் உள்ள தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று தபால் மூல வாக்களிப்பை பதிவு செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, தபால் மூல வாக்களிப்பை இதுவரை மேற்கொள்ளாத பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாளைய தினம் அவர்களின் அலுவலகங்களில் தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள முடியும் என்றும், அந்த சந்தர்ப்பம் தவறினால் நாளை மறுதினம் தமது மாவட்டங்களில் உள்ள தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று தமது வாக்குகளை பதிவு செய்யலாம் என்று பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.

Related posts:

உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஒரே தமிழ் அரசியல் தலைவர் டக்ளஸ் தேவானந்தா - கிழக்கு மக்கள் பெருமிதம்! ...
பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழிவு - கல்வி அமைச்சு அறிவிப...
நட்பு நாடுகளுக்கு எதிரான எந்தவொரு அணு ஆயுதத் தாக்குதலும் வட கொரியாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும...

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பம் - அடுத்த ஆண்டுக்கான பாதீடு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி முன்வைப்பு!
இலங்கையில் புதிய வைரஸ் பிறழ்வால் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் - சுகாதார தரப்பினர் எச்சரிக்...
பயங்கரவாதத்தை விரும்பாத கொள்கையுடன் அணுகுகிறோம் - ஐ.நா. பொதுச்சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநி...