மார்ச் வரை அனைத்து பாடசாலைகளும் மூடப்படும்!
Friday, February 28th, 2020எதிர்வரும் மார்ச் மாதம் வரை ஜப்பானில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வலியுறுத்தியுள்ளார்.
ஜப்பானின் கொரோனா வைரஸ் பரவலின் அச்சம் காரணமாகவே இவ்வாறு அனைத்து பாடசாலைகளுக்கும் மார்ச் மாதம் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் இதுவரை 800 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 700 க்கும் மேற்பட்டோர் டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் அடையாளம் காணப்பட்டனர்.
ஜப்பானில் இதுவரை கொரோனா தொற்றினால் 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
நீதித்துறைக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்த வேண்டும்!
பலாலியில் இருந்து ஒக்ரோபர் நடுப்பகுதிக்குள் விமான சேவை -- விமான சேவைகள் நிறுவனத்தின் உதவித் தலைவர்!
நெடுந்தீவு குறிகாட்டுவான் கடற்போக்குவரத்தில் சமாசப் படகும் சேவையில் ஈடுபடவுள்ளது - கடற்தொழில் சங்கங்...
|
|